செய்திகள்

புரோ வாலிபால்: இறுதியில் காலிக்கட் ஹீரோஸ்

DIN


புரோவாலிபால் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை காலிக்கட் ஹீரோஸ் பெற்றது.
இந்தியாவில் வாலிபால் ஆட்டத்துக்கு உத்வேகம் தரும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்ற 6 அணிகள் கொண்ட புரோ வாலிபால் லீக் போட்டியை இந்திய வாலிபால் சம்மேளனம், பேஸ்லைன் வென்சர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தன.
இதன் தொடக்க ஆட்டம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. கொச்சியில் முதல் கட்டப் போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்டப் போட்டிகள் நடந்து வருகின்றன. அரையிறுதி ஆட்டங்களை எட்டிய நிலையில், முதல் அரையிறுதி காலிக்கட் ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் இடையே செவ்வாய்க்கிழமை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
காலிக்கட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 15-12, 15-9 என முதல் 2 செட்களை எளிதாக கைப்பற்றியது.
எனினும் மூன்றாவது செட்டில் மும்பை அணியினர் சவாலை ஏற்படுத்தினாலும், இறுதி செட்டையும் 16-14 என நேர் செட்களில் கைப்பற்றி, இறுதிச் சுற்றில் நுழைந்தது காலிக்கட். ஜெரோம் வினித் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார்.
சென்னை-கொச்சி மோதல்: புதன்கிழமை இரவு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் உள்ளூர் அணியான சென்னை ஸ்பாட்ரன்ஸ்-கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT