செய்திகள்

புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்

DIN


புரோ வாலிபால் லீகின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது சென்னை ஸ்பார்டனஸா அல்லது காலிக்கட் ஹீரோஸ் அணியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொச்சியில் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் பிவிஎல் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சென்னை-காலிக்கட் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
காலிக்கட் ஹீரோஸ் அணி இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. அரையிறுதியில் யு மும்பா அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
அதே வேளையில் சென்னை அணி அரையிறுதிக்குள் நுழைய கடும் முயற்சி மேற்கண்டே வந்தது. கொச்சி அணியிடம் 1-2 என அரையிறுதியில் பின்தங்கி இருந்து அதில் மீண்டெழுந்தது சென்னை, 
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 6.50 மணிக்கு நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT