ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தோல்வி எதிரொலியாக தனது பதவியை ராஜிநாமா செய்தார் இந்திய அணியின்தலை பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.
ஐக்கிய அரபு நாடுகளில் ஏஎஃப்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தாய்லாந்தை 4-1 என்ற இந்திய அணி, அடுத்து யுஏஇ, பஹ்ரைன் அணிகளிடம் தோல்வியுற்று வெளியேறியது.
சிறப்பாக ஆடியும் இந்திய அணி வெளியேறியது, கால்பந்து வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் பதவி விலகியுள்ளார்.
அவர் கூறியதாவது-கடந்த 2015 முதல் 4 ஆண்டுகளாக இங்கு பயிற்சி அளித்தேன். ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என உழைத்தோம். அதுபோல் தகுதி பெற்று, சில சாதனைகளையும் படைத்தோம். இதில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர் என்றார்.