செய்திகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம்

DIN

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என ஆஸி. ஒரு நாள் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
அடிலெய்ட், மெல்போர்ன் ஆட்டங்களில் இந்தியா அபாரமாக ஆடி வென்று தொடரையும் 2-1 என முதன்முறையாக கைப்பற்றியது. 
இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒரு நாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே காரணம்.எனது ஆடும் உத்தியிலும் தவறுகளை களைய வேண்டும். சரியான வலுவான ஒருங்கிணைப்பும் அணி மத்தியில் இல்லை. எனது ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக ஆடவில்லை. ஓய்வுக்காலத்தை குடும்பத்துடன் கழிக்கலாம் என்றார்.
தொடக்க வீரரான பின்ச் டெஸ்ட் தொடரில் 97 ரன்களையும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமார் 3 முறை பின்சை அவுட்டாக்கினார். 
இலங்கைக்கு எதிராக ஆஸி. அணி ஆடவுள்ள டெஸ்ட் தொடரில் ஆரோன் பின்ச் சேர்க்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT