வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மாட்ரிட் நீதிமன்றம் ரூ.152 கோடி அபராதம் விதித்தது.
ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலகட்டத்தில் ரொனால்டோ தனக்கு கிடைத்த உண்மையான வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டார் என ஸ்பெயின் வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக மாட்ரிட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வரி ஏய்ப்பு புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில் ரொனால்டோ தரப்புக்கும், வரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 23 மாதங்கள் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் விதமாக அபராதம் செலுத்த ரொனால்டோ ஒப்புக் கொண்டார்.
இதுதொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாரோட்ரிக்ஸ்டன் மாட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.அங்கு அவர் ரூ,152 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.