செய்திகள்

இந்திய மகளிர் டி20 அணியை மீண்டும் வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து அணி!

எழில்

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20யையும் வென்று தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.

குவாஹாட்டியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் இந்தமுறையும் பேட்டிங்கில் சொதப்பியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே  எடுக்கமுடிந்தது. மிதாலி ராஜ் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் பிரண்ட் 3 விக்கெட்டுகளையும் லின்சே ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

இந்த எளிதான இலக்கை 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது இங்கிலாந்து மகளிர் அணி. தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 55 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி வென்றுள்ளது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT