தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-வங்கதேசமும் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை நொறுக்கியது. தலிமா சிப்பர், மணிஷா, இந்துமதி, சஞ்சு கோலடித்தனர்.
பதிலுக்கு வங்கதேச அணியால் கோல் போட முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது இந்திய அணி.