செய்திகள்

சாஃப் மகளிர் கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா

DIN


தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-வங்கதேசமும் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை நொறுக்கியது. தலிமா சிப்பர், மணிஷா, இந்துமதி, சஞ்சு கோலடித்தனர்.
பதிலுக்கு வங்கதேச அணியால் கோல் போட முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT