2020 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வரும் 2020 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வரும் 2020 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் ஆடி வரும் இலங்கை அணியின் ஒருநாள் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் மலிங்கா. 
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முடிந்த பின் ஒருநாள் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவேன். 
மேலும் ஆஸ்திரேலியாவில் 2020 அக்டோபரில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என்றார் 35 வயதான மலிங்கா.
டி20 உலகக் கோப்பையோடு எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றார். டி20 ஆட்டத்தில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com