சமூக வலைதளங்களில் 10 கோடிக்கு பேருக்கு மேலாக பின்பற்றப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலை தளங்களில் தனது கருத்துக்களையும், படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு கோலி, ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இன்ஸ்டகிராமில் 3.36 கோடி, சுட்டுரையில் (டுவிட்டர்) 2.95 கோடி பேர், முகநூலில் 3.7 கோடி பேர் என மொத்தம் 10 கோடி பேர் கோலியை பின்தொடருகின்றனர்.
இச்சாதனையை படைத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி.
கால்பந்து விளையாட்டில் பிரபலமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை இன்ஸ்டகிராமில் மட்டும் 16.7 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.