தமிழ்நாடு
குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர்
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குறைந்த அளவில் தண்ணீர்விழுந்தது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குறைந்த அளவில் தண்ணீர்விழுந்தது.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை.
மாறாக பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர்விழத் தொடங்கியது.
குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவிலும், ஐந்தருவியில் மூன்று கிளைகளிலும், புலியருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் மிதமாக தண்ணீர் விழுகிறது.