குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் குறைபாடுடையோர் நேரில் வர டிஎன்பிஎஸ்சி அழைப்பு

குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது. 

குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது. 
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
குரூப் 2ஏ தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோரில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.
6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர். பதிவேற்றம் செய்யப்பட்ட 6,171 விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 2 ,229 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்கள் வரும் 16 முதல் 23-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com