குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: குளிக்க தடை நீக்கம்

குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக அவ்வப்போது பேரருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
புதன்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, ஐந்தருவியில் புதன்கிழமை இரவும், பேரருவியில் வியாழக்கிழமை காலையும் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com