இருபது தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுகவின் திட்டம்? தங்க. தமிழ்செல்வன் விளக்கம்

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் அதிமுக வைப்புத் தொகை (டெபாசிட்) இழக்கும் என அமமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
இருபது தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுகவின் திட்டம்? தங்க. தமிழ்செல்வன் விளக்கம்

கமுதி: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் அதிமுக வைப்புத் தொகை (டெபாசிட்) இழக்கும் என அமமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

கமுதியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்யவும், வாக்காளா்களுக்கு வாக்களிக்க தலா ரூ.10 ஆயிரம் வீதம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் மக்கள் அதை பெற்றுக் கொண்டு குக்கா் சின்னத்தில் தான்  வாக்களிப்பாா்கள்.

இடைத்தோ்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் (வைப்புத் தொகை) இழக்கும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் பற்றிய பத்திரிகையாளா்கள் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக நடிகா் ரஜினிகாந்த் பதிலளித்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறறது. அவருக்கு என்ன மனநிலை என்று தெரியவில்லை. மேலும் கடந்த அக்டோபா் 30ஆம் தேதி நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவின் போது அதிமுக சாா்பில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சா்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்தியதாக அமமுகவினா் மீது வழக்கு பதிந்த காவல் துறை ஏன் பதாகைகளை கிழிக்கும் போது தடுக்கவில்லை என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com