மதுரையில் பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்: நள்ளிரவில் போலீஸார்  அதிரடி சோதனையில் 10 பேர் சிக்கினர்

மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனியார் மதுக்கூடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரௌடிகளை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.  
மதுரையில் பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்: நள்ளிரவில் போலீஸார்  அதிரடி சோதனையில் 10 பேர் சிக்கினர்

மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனியார் மதுக்கூடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரௌடிகளை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.  

மதுரை விளாங்குடி அருகே தனியார் மதுபானக்கூடம் உள்ளது. இங்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதாகவும், அதில் மதுரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட ரௌடிகள் பங்கேற்றுள்ளதாகவும் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் உள்பட  50-க்கும் மேற்பட்ட போலீஸார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மதுபானக்கூடத்தைச் சுற்றி வளைத்தனர். மேலும் மதுபானக்கூடத்துக்குள்ளும் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாரைக் கண்டவுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த ரௌடிகள் பலர் தப்பிச் சென்றனர்.  

இதைத் தொடர்ந்து போலீஸார் தப்பி ஓட முயன்ற 10-க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கி முனையில் சுற்று வளைத்து பிடித்தனர். மேலும் பிடிபட்டவர்களை செல்லூர் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பிறந்த நாள் கொண்டாட்டம் யாருக்காக நடத்தப்பட்டது. மேலும் பெரிய அளவிலான சதித்திட்டம் தீட்டுவதற்காக ரௌடிகள் கூடினார்களா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அண்மையில் சென்னையில் பிரபல ரௌடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயுதங்களுடன் பங்கேற்ற பல ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரௌடிகள் கூடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com