கஜா புயல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயலை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
கஜா புயல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயலை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்துள்ளார். 

கஜா புயல் இன்று இரவு நாகையில் கரையைக் கடக்கவுள்ளது. கஜா புயலால் புதுச்சேரி, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வையும் வரும் டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். இதன்மூலம், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் நாளை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

நாகைக்கு 95 கி.மீ தொலைவில் இருந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கும் கஜா புயல், இன்று இரவு நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com