தமிழ்நாடு

அரசின் சார்பில் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம்

DIN


தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நவம்பர் 30-ஆம் தேதி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நவம்பர் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 
தற்போது செயல்பாட்டிலுள்ள அனைத்து மின்னணு முறை சந்தைப்படுத்துதல் குறித்தும், அவற்றை எவ்வாறு தொழிலில் செயல்படுத்தலாம் என்பது குறித்தும் நிகழ்ச்சியில் விளக்கப்படும். 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருவரும் இதில் பங்கேற்கலாம். 
இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ, இணையதளம் மூலமாகவோ பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-22252081, 22252082, 86681 02600 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது w‌w‌w.‌e‌d‌i‌t‌n.‌i‌n  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT