சிலை கடத்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சிலை கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 113 வழக்குகளின் ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனத் தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதேபோல் பழங்காலச் சிலைகள் மற்றும் புராதனப் பொருள்களைப் பதுக்கி வைத்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் தாக்கல் செய்த மனுக்களுக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com