கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு முடிந்த அளவுக்கு உதவிகளை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங்: தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து முதல்வர் கே. பழனிச்சாமியிடம் விசாரித்தேன். பாதிக்கப்பட்ட இடங்களை பழைய நிலைமைக்கு கொண்டு வர மத்திய அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளேன் என்றார்.