மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கஜா புயல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் பேச்சு

கஜா புயல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கஜா புயல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் பேச்சு


கஜா புயல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.   

கஜா புயல் தாக்கியதில் தமிழகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. அதன் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, புயலால் ஏற்பட்ட நிலைமை குறித்து அவரிடம் கேட்டறிந்தார். மேலும், தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com