திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே இன்று ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்


போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே இன்று ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேத்துப்பட்டை அடுத்த மோதனபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கருணாகரன் மகள் பூமிகா (14). பாலு மகள் சுபாஷினி (10). இவா்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் முறையே 8-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர். 

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.18) பள்ளி விடுமுறை என்பதால், அதே ஊரில் உள்ள பெரிய ஏரிப் பகுதியில் சுள்ளி பொறுக்க சென்ற மாணவிகள், ஏரியில் இருந்த குட்டையில் குளித்துள்ளனா்.

 எனினும், இருவருக்கும் நீச்சல் தெரியாததால், சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கியுள்ளனா். அவா்களது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவிகளை காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், அதற்குள் மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

பின்னர், அவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com