கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை பூனைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்கப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருடன் உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது உடலை பிணவறைக்குக் கொண்டு செல்லாமல் வார்டிலேயே விட்டுவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
அப்போது அங்கே சுற்றிக் கொண்டிருந்த பூனை, பெண்ணின் உடலைக் கடித்தது. இதைப் பார்த்த நோயாளிகள் மருத்துவர்களிடமும், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர், சம்பவத்தை செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இதையடுத்தே அப்பெண்ணின் உடலை ஊழியர்கள் பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.