மதுரை: கஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி வேண்டும் எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் அழகுமணி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க கோரியும் முறையீடு செய்தார்.
இதுகுறித்து வழக்குரைஞர் அழகுமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழகக்கில், கஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின்வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுக்கு மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக அறிவுறுத்திய நீதிமன்றம், பிற்பகலில் அவசர வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.