சென்னையில் பரவலாக செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினம்வேதாரண்யம் இடையே கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் சென்னைக்கு மழை கிடைக்கவில்லை. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, நங்கநல்லூர், எழும்பூர், தாம்பரம் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை காரணமாக, பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதுதவிர, பல இடங்களில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் இரவு 8.30 மணி நிலவரப்படி, மீனம்பாக்கத்தில் 27.5 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5.4 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.