தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர், புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரையில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் அநேக பகுதிகளில் புதன்கிழமை காலைமுதல் தொடர்ச்சியாகப் மழை பெய்து வருகிறது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையமும் அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர், நாகை ,புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணை வேந்தர் அறிவித்துள்ளர். இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.