புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்துக்கு பள்ளிகளைத் திறக்கக் கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க தனி முகாம்கள் அமைக்காமல் பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பி இருக்கிறது என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக பள்ளிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு பள்ளிகளை திறக்கவேண்டும்.