மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மேலும் ஓர் அலகில் மின் உற்பத்தி புதன்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓர் அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதல் பிரிவில் நான்காவது அலகில் சில நாள்களுக்கு முன்பு கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை இரண்டாவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது