தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால், 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.05 அடியை எட்டியது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.
வைகை அணை நிரம்பினால், அதில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.