பொது விடுமுறை அறிவிப்பு காரணமாக வரும் திங்கள்கிழமை (நவ.5) நடத்தப்பட இருந்த பருவத் தேர்வை சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகை நவம்பர் 6 -ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதியும் விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள், டிசம்பர் 7 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.