கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்க்க ஹெச்.ராஜா முயற்சிக்கிறார் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது,
நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தவறு இல்லையா?. காவல்துறை ஏன் அமைதி காக்க வேண்டும்?. மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜகவினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இடைத்தேர்தல்களில் இரண்டாம் இடத்துக்கு திமுகவும், அதிமுகவும் போட்டி போடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அண்மையில் அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல் துறையையும் விமர்சித்ததாக கூறி திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வழுத்து வருகிறது.