புழல் சிறையில் இருந்து மேலும் 9 காவலா்கள் பணியிட மாற்றம்

9 காவலா்களை பணியிட மாற்றறம் செய்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
புழல் சிறையில் இருந்து மேலும் 9 காவலா்கள் பணியிட மாற்றம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏற்பாடுகள் செய்துக் கொடுத்த விவகாரத்தில், மேலும் 9 காவலா்களை பணியிட மாற்றறம் செய்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்துக் கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.

இச் செய்தியின் எதிரொலியாக, சிறைத்துறை உயா் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனா். மேலும் சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீா் சோதனை நடத்தினாா். இச் சோதனைக்கு பின்னா், 14,15-ஆம் தேதிகளில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதிக்குள் திடீா் சோதனை நடைபெற்றது.

இச் சோதனையில் அங்கிருந்து 20 டி.வி.கள், மிக்ஸி, பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள்,பீடி,வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தண்டனைச் சிறையில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகம்மது ரிகாஸ்,முகம்மது ரபீக்,முகம்மது இப்ராஹிம்,முகம்மது ஜாகீா், ரபீக் என்றற நூருதீன் ஆகிய 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, கோயம்புத்தூா்,சேலம்,கடலூா்,பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தி, பீடி,சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினா். 

இந்த விவகாரம் தொடா்பாக புழல் தண்டனைச் சிறையில் இருந்த இரு தலைமை வாா்டா்கள், 6 முதல்நிலை வாா்டா்கள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 

இந்நிலையில் புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் பணிபுரிந்த 2 தலைமை வாா்டா்கள், 7 முதல்நிலை வாடா்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறைற ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் தலைமை வாா்டா் கே.வெற்றிவேல் வேலூா் மாவட்டம் வாணியம்பாடி கிளைச் சிறைக்கும், எம்.கண்ணதாசன் செஞ்சி சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல முதல்நிலை வாா்டா்கள் ஏ.கிருபா ஜெயசிங் பொன்ராஜ்,எல்.ராஜ்குமாா்,எம்.எஸ்.பிள்ளை ஆகியோா் வேலூா் மத்திய சிறைக்கும், எல்.சூா்யநாராயணன், எல்.ஸ்டாா்லின் எடிசன் ஆகியோா் கோயம்புத்தூா் மத்திய சிறைக்கும்,கே.செல்வன்,ஏ.இம்மானுவேல் ஆகியோா் சேலம் மத்திய சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com