மதுரை: மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூரில் உள்ள செவிலியரின் வீட்டில் கருக்கலைப்பு செய்த போது 7 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் 4வதும் பெண் குழந்தையாக இருக்கக் கூடும் என்று கருதி இந்த கருக்கலைப்பில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொட்டப்பநாயக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் லட்சுமி வீட்டில் இந்த கருக்கலைப்பு நடந்துள்ளது. லட்சுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.