ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கும், ஆய்வுக் குழுவுக்கு எதிரான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவானது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழுவை நியமித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.