உலக முதலீட்டாளர் மாநாடு: ஷாங்காய் கருத்தரங்கில் அமைச்சர் சம்பத் பங்கேற்பு

உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான ஆயத்தக் கூட்டங்களில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று வருகிறார்.


உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான ஆயத்தக் கூட்டங்களில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று வருகிறார். அதன்படி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார்.
அமைச்சருடன் வணிகம் மற்றும் தொழில் ஆணையாளர் ராஜேந்திர குமார், தொழில் வழிகாட்டுதல் குழுவின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் சீனா சென்றுள்ளனர். தொடர்ந்து, இவர்கள் சிங்கப்பூர் செல்லவும் திட்டமிட்டுள்ளதாகத் தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயணங்களை முடித்து விட்டு வரும் 21-ஆம் தேதியன்று அவர்கள் சென்னை திரும்புவர் என்று தொழில்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com