தமிழ்நாடு

நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்: திமுக பொருளாளர் துரைமுருகன்

DIN


நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் பெறப்பட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். 
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, மேல்முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அரசு மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்தது, அதிமுக போட்ட பிச்சை என்று பேசினார். இது, திமுகவின் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. 
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை துரைமுருகன் அளித்த பேட்டியில், அதிமுக அரசு இடம் ஒதுக்கினால்தான் பிச்சை. நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு இடம்பெற்றோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT