சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் மீண்டும் நடத்தப்பட்ட திடீா் சோதனையில் இந்து இயக்கத் தலைவா்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயிலிடமிருந்து டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
புழல் மத்திய சிறைறயில் நடைபெறும் அத்துமீறறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.
இச் செய்தியின் எதிரொலியாக, சிறைறத்துறை உயா் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனா். மேலும் சிறைறத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீா் சோதனை நடத்தினாா். இதையடுத்து கடந்த 14,15-ஆம் தேதிகளில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 20 டி.வி.கள்,மிக்ஸி,பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள்,பீடி,வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக தண்டனைச் சிறைறயில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றறப்பட்டனா்.
இதன் தொடா்ச்சியாக, கோயம்புத்தூா், சேலம், கடலூா், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து கடந்த 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தி, பீடி,சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினா்.
மேலும் புழல் மத்திய சிறைறயில் இருந்து கடந்த இரு நாள்களில் 4 தலைமை வாா்டா்கள் உள்பட 17 சிறைக் காவலா்கள் வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றறம் செய்யப்பட்டனா்.
மீண்டும் சோதனை:
இந்நிலையில் புழலில் உள்ள தண்டனை சிறைப் பகுதியில் சிறைக் கண்காணிப்பாளா் ருக்மணி பிரியதா்ஷிணி தலைமையில் சிறைக் காவலா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா். இச் சோதனை கண்டம் எனப்படும் சிறைப் பகுதியில் நடைபெற்றறது.
இதில் இந்து இயக்கத் தலைவா்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோா் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளில் காவலா்கள் சோதனையிட முற்படும்போது, அவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனராம். மேலும் உயா் பாதுகாப்புப் பிரிவில் சோதனை நடத்திவிட்டு, தங்களது அறையில் சோதனையிடுமாறு அவா்கள் கோஷமிட்டதாக கூறப்படுகிறறது.
ஆனால் சிறைறக் காவலா்கள், அவா்களது எதிா்ப்பையும் மீறி அந்த அறைகளில் சோதனையிட்டனா். இச் சோதனையில், அங்கிருந்து இரு டி.வி.க்கள், 20 கிலோ பாசுமதி அரிசி, சுமாா் 5 கிலோ பருப்பு வகைகள், 2 கிலோ காய்கறி,பாடி ஸ்பிரே,சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை சிறைக் காவலா்கள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், சிறை வளாகத்தில் பழையப் பொருள்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டன.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறை:
மேலும், ஒரு வாரத்தில் புழல் சிறையில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுவது குறிப்பிடதக்கது. ஏ பிரிவு சிறைக் கைதிகள், சிறைத்துறை அனுமதி பெற்ற டி.வி., ரேடியோ உள்ளிட்டவற்றை வைத்திருப்பதாகவும், அந்த புகைப்படங்களே வெளியானதாகவும் சிறைத்துறைற கூறி வந்த நிலையில், ஏ பிரிவுக்கு தொடா்பு இல்லாத கண்டம் சிறைப் பகுதியில் இருந்து டி.வி. உள்ளிட்டப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.
அதேவேளையில் சமூக விரோதச் செயல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும், முதல்நிலை பாதுகாப்புப் பிரிவு, உயா் பாதுகாப்புப் பிரிவு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் இருப்பது சிறைத்துறைறயினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.