இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக-காங்கிரஸுக்கு எதிராக வரும் 25-ஆம் தேதி வருவாய் மாவட்டம் வாரியாகப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தெரிவித்துள்ளதாவது,
ஈழத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு உதவிய திமுக - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தோர் போர்க்குற்றம் புரிந்ததை விசாரித்து தண்டனை பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி வருவாய் மாவட்டம் வாரியாப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதன்படி தேனி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டங்களில், மாவட்ட வாரியாக சிறப்புரையாற்றுபவர்கள் பட்டியல்:
தேனி - ஓ.பன்னீர்செல்வம், வைகைச்செல்வன்
சேலம் - எடப்பாடி கே. பழனிசாமி
திருவள்ளூர் - மதுசூதனன், மஃபா பாண்டியராஜன், கோ. சமரசம், டி.கே.கலா
காஞ்சிபுரம் - கே.பி.முனுசாமி, பெஞ்ஜமின், நிர்மலா அருள்பிரகாஷ், கோவை புரட்சித்தம்பி