குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா கிடங்கின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி திருநீலபிரசாத் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதவ ராவ் உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இவர்கள் 5 பேரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.