ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளத்த பேட்டியில் மேலும் கூறியதாவது,
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எங்கள் கருத்துகளை கேட்கத் தயாரில்லை.
தென் மண்டல தீர்ப்பாயத்தில் மறுபடியும் எங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி தென் மண்டல தீர்ப்பாயத்தில் எங்கள் கருத்துகளை கூற சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.