தமிழக சிறப்பு காவல் படை பட்டாலியன் காவலர் தற்கொலை முயற்சி தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சிறப்பு காவல் படை 7-ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர் காவலர் சுரேஷ். இவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காவலர் சுரேஷ், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.