307 பிரிவு நீக்கம்: அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். 
307 பிரிவு நீக்கம்: அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசினார்.

இதையடுத்து கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். மேலும் 3 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  கருணாஸ் கைது குறித்து பேரவதை் தலைவரிடம் தெரிவித்தததாக நீதிபதியிடம் காவல்துறையினர் கூறினர்.

இந்நிலையில், 307-வது பிரிவு (கொலை முயற்சி வழக்கு) நீக்கப்பட்டு எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கருணாஸ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸ் தரப்பில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவருடைய வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com