எம்எல்ஏ கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனு

முதல்வர் மற்றும் போலீஸாரை அவதூறாகப் பேசியதற்கு கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். 
எம்எல்ஏ கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனு

முதல்வர் மற்றும் போலீஸாரை அவதூறாகப் பேசியதற்கு கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ் பேசியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, கூட்டுச் சதி, வன்முறையைத் தூண்டுதல், கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி செல்வநாயகம் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த வியாழக்கிழமை (செப். 20) வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சாலிகிராமம் வீட்டில் தங்கியிருந்த கருணாஸை போலீஸார் கைது செய்தனர். 

பின்னர், எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற 13-ஆவது மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டுக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நீதிபதி கோபிநாத் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் பிரிவை நீதிபதி கோபிநாத் ரத்து செய்தார். இருவரையும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸை பாதுகாப்புக் கருதி வேலூர் மத்திய சிறைக்கும், செல்வநாயகம் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர். இதையடுத்து, புழலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com