கோத்தகிரி அருகே யானை தாக்கி முதியவர் சாவு

கோத்தகிரி அருகே கூட்டடா எஸ்டேட் பகுதியில் யானை தாக்கியதில் எஸ்டேட் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கோத்தகிரி அருகே கூட்டடா எஸ்டேட் பகுதியில் யானை தாக்கியதில் எஸ்டேட் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 கோத்தகிரி கூட்டடா பகுதியைச் சேர்ந்தவர் சாமிதாஸ் (63). இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டுக்கு வெளியே நாய் குரைத்துக்கொண்டிருந்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, குட்டியுடன் ஒரு யானை வீட்டுக்கு முன்புள்ள மரத்தில் கொய்யா பழத்தைத் தின்று கொண்டிருந்தது. யானையும், குட்டியும் அங்கு நிற்பது தெரியாமல் வெளியே வந்துள்ளார் சாமிதாஸ். அப்போது, யானை திடீரென அவரைத் தூக்கிப்போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இது பற்றி கோத்தகிரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சாமிதாஸ் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இது குறித்து காவல் துறையினர், வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com