திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
முன்னதாக நேற்றிரவு திருப்பதி சென்ற முதல்வரை, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவருக்கு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செயதளித்தனர்.
இரவு திருமலையில் தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தன் குடும்பத்தினருடன் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.