பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை : பகுதிநேர ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள். 
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள். 


பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
முன் அனுமதி இல்லாமல் ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் அங்கு திரண்டியதால் நுங்கம்பாக்கம் போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அப்போது உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசிய பின்னரே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
இதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 
அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் ரூ. 2,200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 எங்களுக்கு சம்பளமாகப் வழங்கப்படுகிறது.
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு ரூ. 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 1996-இல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 2006-ஆம் ஆண்டு 13,500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது, 12,500 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். அரசின் சார்பில் பணி நிரந்தரம் செய்வது குறித்து உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com