அதிமுக அரசை விமர்சனம் செய்தால் எனது நாக்கை அறுப்பார்களா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

அதிமுக அரசை விமர்சனம் செய்தால் தன்னுடைய நாக்கை அறுப்பார்களா? என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அரசை விமர்சனம் செய்தால் எனது நாக்கை அறுப்பார்களா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

அதிமுக அரசை விமர்சனம் செய்தால் தன்னுடைய நாக்கை அறுப்பார்களா? என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
தமிழக அமைச்சர்கள் மாண்பை காக்க வேண்டும். பொறுப்பற்ற பேசாமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காக்க வேண்டும். ஈழத் தமிழர்களை படுகொலைக்கு காங்கிரஸ், திமுக கட்சிகளே காரணம். 

7 பேர் உயிரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். 7 பேர் சிறையில் வாடுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். 7 பேரை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும், இல்லையேல் சிறையில் இருக்கட்டும். நானும்தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன். என்னுடைய நாக்கை அறுப்பார்களா?. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக அரசை பற்றி தரகுறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் என தஞ்சாவூரில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியிருந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com