இலங்கைத் தமிழர் படுகொலைக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்கு பொறுப்பேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்கு பொறுப்பேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போருக்கு உதவிய காங்கிரஸ், திமுக கட்சிகளைக் கண்டித்து அதிமுக சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு ஆட்களை திரட்டி வந்து டிடிவி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தி அதில் என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார். நெஞ்சில் வஞ்சத்தை வைத்து விஷத்தை அவர் கக்கியுள்ளார். துனிவு இருந்தால் வரும் பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அவர் போட்டியிடட்டும். அவரை எதிர்த்து நான் களம் இறங்கத் தயார். டிடிவி.தினகரனின் குடும்பத்தில் பல கட்சிகள் முளைத்துள்ளதைப் போல, மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் பல பிரிவுகளாக உள்ளனர். முதலில் உங்கள் குடும்பத்தை சரிசெய்யுங்கள். அதன்பிறகு நாட்டை சரிசெய்யலாம்.
காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது, இலங்கையில் நடைபெற்ற போருக்கு உதவியதாக ராஜபட்சே கூறியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றார் சி.விஜயபாஸ்கர்.
அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து தலைமை வதித்தார். கந்தர்வர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், நகரச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com