ஒளிப்பதிவாளர் தர்மா காலமானார்

ஒளிப்பதிவாளர் தர்மா (52) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
ஒளிப்பதிவாளர் தர்மா காலமானார்


ஒளிப்பதிவாளர் தர்மா (52) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
பர்மா தமிழரான இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்ற தர்மா, கைநாட்டு, மைக்கேல்ராஜ், மதுரைக்காரத் தம்பி, ஏழாவது மனிதன் உள்பட 35-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கரண்ட் என்ற படத்துக்காக இவர் தேசிய விருது பெற்றுள்ளார். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் தர்மா வசித்து வந்தார். இவரது உடல் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 98843 31103.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com