புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரியில் ஊதிய நிலுவை தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இன்று அரசு பேருந்துகள் இயங்கவில்லை.
இந்த வேலைநிறுத்தத்தால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.