தமிழகம் மற்றும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டும் ஒன்றுதான்.
கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருவாரா? போலியில்லாத நிஜக் கோபத்தோடு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத தனது சொந்த உரையை ஆற்றுவாரா? என்பதே.
இது தேமுதிகவினருக்கு மட்டுமல்லாமல், ஓரமாக நின்று அரசியலை உற்று நோக்கும் சாதாரண மக்களுக்கும் எழும் எதிர்பார்ப்புதான்.
இதற்கு அவரே பதில் சொல்லியிருக்கிறார். அவரது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு விடியோ வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிரசாரத்துக்கு வருவீர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு, விஜயகாந்த் விரைவில் வருவேன். அங்கு வந்து என் பேச்சைக் கேட்க சொல்லுங்கள் என்று பதிலளிக்கிறார்.
மோடியைப் பற்றி கேட்கும் போது, மோடி நல்லவர், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தனது விருப்பத்தையும் பதிவு செய்கிறார் விஜயகாந்த்.
அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்று நம்புவோம்.