குமரி: கோதையாறு நீர் மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை

குமரி மாவட்டம் கோதையாறு நீர் மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அஜின்ராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


குமரி மாவட்டம் கோதையாறு நீர் மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அஜின்ராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

9வது பட்டாலியனைச் சேர்ந்த அஜின் ராஜ், 21 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தார். அப்போது அவர் தனது துப்பாக்கியால் கழுத்துப் பகுதியில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

விடுமுறைக்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், குடும்பப் பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிச்சுமையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com